ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது….!

Published by
லீனா

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது சில மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் ரெம்டெசிவிர் தடுப்பூசியை வாங்க கீழ்ப்பாக்கம் அருகே பொதுமக்கள் நீண்ட வரிசையில்  காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகே கொரோனா தடுப்பு மருந்து ரெம்டெசிவிர் மருந்து அதிக விலைக்கு  விற்கப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மருத்துவர் முகமது இம்ரான் கான் கள்ள சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் ரூ.4,700 ரூபாய்க்கு வாங்கி  ரூ.20,000-க்கு கள்ள சந்தையில் விற்க முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

அவரிடம் இருந்து 17 மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மருத்துவர் முகமது இம்ரான் கான், இவருக்கு உறுதுணையாக இருந்த மேடவாக்கத்தை சேர்ந்த விஜய், ராஜ்குமார் மற்றும் விக்னேஷ்  ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

12 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

13 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

13 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

14 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

14 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

15 hours ago