4 நாட்களாக தொடர் சோதனை ..! வேலம்மாள் குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு

Published by
Venu
  • வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான  இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
  • இந்த சோதனையில் 532 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலம்மாள் குழுமம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.இந்த குழுமத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளிகள் ,கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இதற்கு இடையில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில்,  2 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் கைப்பற்றப்பட்டதுடன், வேலம்மாள் கல்விக் குழுமம் 532 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது  சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து  சம்பந்தப்பட்ட குழும நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

23 minutes ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

59 minutes ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

1 hour ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

2 hours ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

2 hours ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

2 hours ago