தமிழக காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். அதில் ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற வேண்டும். மேலும் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள டிஜிபிக்கள் , டிஐஜிக்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கும் அனுமதி பெறவேண்டும்.
இதற்காக ஒவ்வொரு தகுதியிலும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புவார்கள் அதன்படி இந்த ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளில் தகுதியுடையவர்களின் பட்டியலை அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதையெடுத்து கூடுதல் எஸ்பி முதல் ஐஜிக்கள் வரை உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது .பின்னர் கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் பதவி உயர்வு வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பதவி உயர்வு பெறும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.என்.சேஷசாயி, சந்தீப் மிட்டல், பால நாகதேவி ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.மேலும் கார்த்திகேயன், பவானீஸ்வரி, சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், என்.கண்ணன், லோகநாதன், தேன்மொழி, ஜோஷி நிர்மல்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 8 அதிகாரிகளுக்கு ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…