[Image Source : IANS]
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
கடந்த மார்ச் மாதம், கொலிஜியம் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. இதனை மத்திய சட்ட அமைச்சகம் கொலிஜியம் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர்.
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…