Chengalpattu Accident [file image]
சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பழுதாகி நின்றது. இதன் காரணமாக பின்பே வந்த ஆம்னி பேருந்து ஒன்று லாரி மீது மோதியதால் அதிகாலை கோர விபத்து ஏற்பட்டது.
லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதால் பின் புறம் வந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன்புறம் பாதியாக நொறுங்கியது. மேலும், இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் , 2 ஆண்கள் மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த 4 பேரில் 3 பேர் சென்னை கொடுங்கையூர் சேர்ந்த தனலட்சுமி என்றும், அகிலி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், பிரவீன் என்றும், தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை செய்தும் வருகிறார்கள்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…