நீரில் மூழ்கி 4 மாணவர்கள் பலி…தலா 1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Published by
பால முருகன்

சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் வட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னங்குறிச்சி கிராமம், கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் , பாலாஜி இரண்டு மாணவர்களும் குளிக்கச் சென்றார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அதைபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வி.குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த தினேஷ். மற்றும்  இன்பரசன் ஆகிய இருவரும் 23 -ஆம் தேதி காலை அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் . இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிவாரணம்  அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, எனது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

12 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

13 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

13 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

14 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

15 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

17 hours ago