திருமணமாகி 40 நாட்களேயான புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் டோல்கேட்டுக்கு அருகிலுள்ள வாழ்வந்தான்புரத்தில் வசித்து வருபவர் அருள் சாமி. இவர் கடந்த மாதம் கிறிஸ்டி ஹெலன்ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாட்கள் முதலே இருவருக்கும் இடையில் சண்டை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 26வயதான புதுமண பெண்ணான கிறிஸ்டி வீட்டின் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு அதிகாலையில் சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் கிறிஸ்டி திரும்பி வராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் சென்ற பார்த்த உறவினர்கள் கிறிஸ்டியை அரை நிர்வாணமாக ஆற்றில் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் . உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாகவும், அவர் 5 சவரன் நகை காணாமல் போயுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெண்ணின் கணவர் அவரை பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொல்ல முயன்றதாக பெண்ணின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து போலீசார் கணவர் அருள்சாமியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், இந்த பகுதியில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் உள்ள காரணத்தால் வேறு யாராவது பெண்ணை கற்பழித்து கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறி அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான 40 நாட்களிலே புதுமண பெண் கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…