தமிழகத்தில் பற்றாக்குறை என்பது கடந்த சில மாதத்திற்கு முன்பாக ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு போதுமான தடுப்புப்பூசிகளை தமிழகத்தில் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் மூலம் தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மத்திய அரசு தேதி வாரியாக ஒதுக்கியுள்ள தடுப்பூசியின் அளவை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை மொத்தமாக 42 லட்சத்து 58 ஆயிரத்து 760 தடுப்பூசி வர உள்ளன. இதில் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு என 13 லட்சத்து 43 ஆயிரத்து 380 கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 560 கோவாக்சின் தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 74 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு வர உள்ளது.
44 வயது மேற்பட்டவர்களுக்கு 21 லட்சத்து 55 ஆயிரத்து 180 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4 லட்சத்து 29 ஆயிரத்து 200 கோவாக்சின் தடுப்பூசிகளும் ஆக மொத்தம் 25 லட்சத்தை 84 ஆயிரத்து 380 தடுப்பூசிகளும் வர உள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…