4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 45 வயது நபர்!அலறிய சிறுமியின் சித்தி!

Published by
Sulai

கோவையில் உள்ள துடியலூரில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர்.இவர்களுக்கு 4 வயதில் சிறுமி உள்ளது.இவர்களது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு புகுந்துள்ளது.இதனால் அச்சம் அடைந்த தம்பதியினர் அண்ணா காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

அங்கேயே கூலிவேலை பார்த்து வந்துள்ளனர்.வழக்கம் போல் அவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் சென்றுள்ளார்.இதனால் அச்சம் அடைந்த சிறுமியின் சித்தி எல்லா இடங்களிலும் தேடி சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 45 வயதான செல்வராஜ் என்ற நபர் தனது வீட்டின் படுக்கை அறையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருந்துள்ளார்.இதை கண்ட சித்தி அச்சத்தில் அலறி சத்தம்போட்டுள்ளார்.

இதனால் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் செல்வராஜை பலமாக தாக்கியுள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சமூக நலத்துறை அதிகாரிகளும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் போக்சோ பிரிவின் படி செல்வராஜை கைது செய்துள்ளனர்.

4 வயது சிறுமிக்கு 45 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

4 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

36 minutes ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

45 minutes ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

1 hour ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

2 hours ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

14 hours ago