வீட்டு வேலை செய்து கொண்டே +2 தேர்வு எழுதிய சென்னை கூவம் நதிக்கரை சேர்ந்த குடிசை வாழ் மாணவி 492 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள கூவம் நதிக்கரையின் ஓரத்தில் உள்ள குடிசையில் வாழ்ந்து வந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி தான் கீர்த்தனா.இவரது குடும்பம் முழுவதையும் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்கு அரசாங்கம் 2 வருடத்திற்கு முன் குடியேற்றி உள்ளது. அப்பொழுது அவர் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இடம் மாற்றம் காரணமாக அதிக வீட்டுக் கஷ்டம் ஏற்பட்டதால் வீட்டு வேலைகளை ஓவர் டைம் ஆக பார்த்துக்கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். நேற்று வெளியாகிய பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் 492 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாங்கள் வைத்துள்ள மளிகை கடையில் தனது நேரத்தை அதிகளவு செலவிட்டு இருந்தாலும் இரவு வந்து சமையலும் அவர்தான் செய்ய வேண்டியிருக்குமாம். காலையில் ஐந்து மணிக்கு, இரவு நேரத்தில் ஒன்பது மணி வரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அதிக மார்க் எடுத்து இருக்கிறேன் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…