தமிழ்நாடு

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதிய மாணவன்..! மாணவனை நேரில் சந்தித்த அமைச்சர்..!

Published by
லீனா

தனக்கு கடிதம் எழுதிய மாணவனை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் ஜெய் பிரணவ் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில்,  நான் கோயமுத்தூர் மாவட்டம் காளப்பட்டி சாலை நேருநகரில் உள்ள எஸ். எஸ்.பி வித்யா நிகேதன் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறேன் .வழக்கறிஞர் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என பன்முகதிறன்கள் கொண்ட உங்களுக்கு கடிதம் எழுதுவதில் பெருமகிழ் அடைகிறேன் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ச்சி நீங்கள்,’முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற வார்த்தைக்கிணங்க வாழக்கையில் பல சாத்னைகளை புரிந்து கொண்டுருக்கிறீர்கள்.

குறிப்பாக நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சரான பிறகு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பெரும்பாலான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். காரணம், அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார
நிலையங்களிலும் உள்ள சுகாதாரம், தரமான மருந்துகள் மற்றும் நவீன உபகரணங்கள்.

“மாரத்தான் மன்னன்” என்னும் அடைமொழிக்கிணங்க 100-மாரத்தான்களில் கலந்து உலக சாதனை புரிந்த உங்களை கண்டு வியக்கிறேன். இந்த வயதிலும், சுறு சுறுப்போடும், தன்னம்பிக்கையோடும் இருக்கும் நிங்கள் இந்த சிறுவனுக்கு ஊக்கமளிக்கும் சில வரிகள் உங்களிடமிருந்து பதில் கடிதமாக எழுதவேண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என எழுதியுள்ளார்.

இந்த நிலையில், மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து, அந்த மாணவனுடன் உணவருந்தியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார்.பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது,அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

26 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

26 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

19 hours ago