தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தடுப்பூசி மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சென்னை தாம்பரம் அருகே கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, ஹைலோ ஆப் என்கின்ற செயலியில், மளிகை பொருட்களை விற்பனை செய்வது போல வடிவமைத்து, அதில் கருப்புப்பூஞ்சை நோய்க்கான மருந்து இருப்பதாக பதிவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, வண்டலூரை சேர்ந்த சரவணன், இரண்டு தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருந்தக ஊழியர்கள், அறிவரசன், தம்பிதுரை,பணியாளர் விக்னேஷ் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் நிர்மல்குமார் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு மருந்து விநியோகம் செய்த நபரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…