5 ஆண்டு சட்டப்படிப்பு – ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!!

Published by
பாலா கலியமூர்த்தி

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் தொடங்கியுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே தொடங்கிய நிலையில், சட்ட கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த அறிவிப்பில், சென்னையில் உள்ள சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும், சீர்மிகு சட்ட கல்லுாரியில், பி.ஏ., பி.பி.ஏ, பி.காம் மற்றும் பி.சி.ஏ, படிப்புடன் இணைந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி., நடத்தப்படுகிறது என்றும் அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் சரஸ்வதி சட்ட கல்லுாரியில், பி.ஏ., எல்.எல்.பி, படிப்பு மட்டும் நடத்தப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்ப பதிவுகளை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 26 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தலைமை செயலகத்தில் துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும், 3 ஆண்டுக்கான எல்.எல்.பி, சட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுக்கான எல்.எல்.எம், படிப்புக்கான மாணவர் சேர்க்கை பதிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாணவர்கள் மேலும் விவரங்களை 044 – 2464 1919, 2495 7414 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago