மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் ஏற்கனவே ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், உள்ளாட்சித்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவித்திருந்த நிலையில், தற்போது நிவாரண தொகை ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு இறப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறப்பான முறையில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு தகுந்த விருதுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…