ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதையும் கொரானா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கல்வித் துறைகள் அரசு அலுவலகங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் தற்போது தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 50% பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு விரைவில் கொரனா வைரஸ் தாக்கக் கூடும் என்ற நோக்கத்தோடு பள்ளிகளும் கல்லூரிகளும் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் பணிக்கு வரக்கூடிய ஊழியர்கள் போல தேங்கி கிடைக்கக்கூடிய கோப்பு பணிகளை முடிப்பதற்காக அனைத்து கல்வி அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் தினமும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுழற்சி முறையில் பணியாற்றுவது தொடர்ந்தாலும் 50 சதவீத ஊழியர்கள் தினசரி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…