புள்ளியியல் துறையில் ரூ.50 ஆயிரம் சம்பளம்.! தமிழர்கள் இல்லாமல் தவிப்பு.! தென் மண்டல இயக்குனர் கருத்து.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தேசிய புள்ளியல் துறையில் பணியில் தமிழர்கள் இருந்தால் சேகரிக்கப்படும் தகவல்கள் தரமானதாக இருக்கும் என தென் மண்டல இணை இயக்குநர் தெரிவித்தார்.
  • ஆரம்ப சம்பளம் ரூ.50,000 வரை கிடைக்க கூடிய மத்திய அரசின் இந்த பணிக்கான வாய்ப்பை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேசிய புள்ளியல் துறையில் பணியில் சேர்வதற்கு ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம் (combined Graduate level examination) என்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் புள்ளியியல் துறைக்கான இந்த தேர்வுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் தமிழர்கள் பணிக்கு வருவதில்லை என்று அதிகாரிகள் வருத்தப்படுகின்றனர். பின்னர் தேசிய புள்ளியல் துறை, சமூக பொருளாதார ஆய்வு, உற்பத்தி துறைகளில் ஆய்வு, சுற்றுலா செலவின ஆய்வு என பல்வேறு ஆய்வுகளை ஆண்டு முழுவதும் நடத்திக் கொண்டு வருகிறது.

இந்த ஆய்வுகளை மேற்கொள்ள களத்திற்கு சென்று மக்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து நேரடி தகவல்களைத் துல்லியமாக பெறவேண்டும். இந்தப் பணிக்கு தமிழ் மொழி தெரிந்து இருப்பது அவசியமாகிறது. ஆனால் தேர்ச்சி பெற்று வருபவர்கள் தமிழ் தெரியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு தமிழ் வகுப்புகள் நடத்தி கள ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஆரம்ப சம்பளம் ரூ.50,000 வரை கிடைக்க கூடிய மத்திய அரசின் இந்த பணிக்கான வாய்ப்பை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றும் தமிழர்கள் இருந்தால் சேகரிக்கப்படும் தகவல்கள் தரமானதாக இருக்கும் என்று புள்ளியியல் துறை தென் மண்டல இணை இயக்குநர் துரை ராஜ் தெரிவிக்கிறார். தேசிய புள்ளியல் துறையின் தமிழ்நாட்டின் வடக்கு மண்டலத்தில் 42 இளநிலை அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 18 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதில் நான்கு பேர் மட்டுமே தமிழ் தெரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

6 minutes ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

42 minutes ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

1 hour ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

13 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

13 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

14 hours ago