ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பற்றி வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கைதர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குளறுபடியால் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அதில் கொரோனா வார்டில் 4 பேரும், பொது வார்டில் மூன்று பேரும் நேற்று உயிரிழந்தனர்.
7 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என புகார் எழுந்தது. ஆனால், இந்த உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி முதல்வர் அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், கொரனோ வார்டில் சிகிச்சை பெற்ற 4 பேர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…