அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் அதிரடியாக நீக்கம்…!

Published by
லீனா

அதிமுகவில் இருந்து மற்ற கட்சியில்  இணைந்தவர்கள், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என 7 பேர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக-வில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டபேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு திமுகவில் இணைந்தார். இதனையடுத்து, அதிமுகவில் இருந்து மற்ற கட்சியில்  இணைந்தவர்கள், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என 7 பேர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், முன்னாள் எம்.எல்.ஏ.வி.நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார்,  ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு, விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்களான என்.எஸ்.வாசன், ஏ.ஆர்.மணிகண்டன், எஸ்.ராமராஜ் பாண்டியன், கே.கே.வேல்முருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், முன்னாள் எம்.எல்.ஏ.வி.நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார்,  ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு, விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்களான என்.எஸ்.வாசன், ஏ.ஆர்.மணிகண்டன், எஸ்.ராமராஜ் பாண்டியன், கே.கே.வேல்முருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவர்களுடன் கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது.’ என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

20 minutes ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

58 minutes ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

2 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

3 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago