நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மிக்க சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றியுள்ளார்.அதன்பின் மக்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி பல்வேறு விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில்,75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இந்த நிகழ்வில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்,திமுக அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த 59 அடி உயரம் கொண்ட தூணின் உச்சியில் நான்கு சிங்கங்களின் மேல் அசோக சக்கரம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக துருப்பிடிக்காத வகையிலான உலோகத்தைக் கொண்டு ரூ.195 கோடியில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும்,ராணுவத்தினரை போற்றும் விதமாக நான்கு ராணுவ வீரர்களின் சிலைகள் தூணை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பு ஆகும்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…