தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா..பாதிப்பு 911 ஆக அதிகரிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 834 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார். கொரோனாவை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என குறிப்பிட்டார். ஊரடங்கை நீடிப்பது பற்றிய மருத்துவக்குழு பரிந்துரையை முதல்வர் பரிசீலினை செய்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் கொரோனா வைரசால் பாதித்துள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் என தலைமை செயலாளர் கூறியுள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

7 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago