வேங்கைவயல் விவகாரம்.! டி.என்.ஏ பரிசோதனைக்கு ரத்தம் தர மறுக்கும் 8 பேர்.!

Published by
மணிகண்டன்

வேங்கைவயல் கிராம விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு 8 பேர் ரத்த மாதிரிகளை கொடுக்க மறுத்துள்ளனர். 3 பேர் ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளனர். 

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பான விசரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 100 நாட்களை கடந்த விசாரணையில் பலரிடம் விசாரித்து இறுதியாக 11 பேர் இறுதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த 11 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து,  அதனை கொண்டு மனிதக்கழிவு கலந்த குடிநீர் மாதிரிகளுடன் ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறிய, புதுக்கோட்டை மஹிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி அனுமதி கேட்டு இருந்தது. டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நிலையில் இன்று 11 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அந்தந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அந்த 11 பேரில் காவலர், குடிநீர்த்தொட்டி ஆபரேட்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகைளை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கியுள்ளனர். மீதமுள்ள 8 பேர் ரத்த மாதிரிகளை வழங்க மறுத்துவிட்டனர்.

ரத்த மாதிரிகளை வழங்க மறுத்த 8 பேரும் வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், சிபிசிஐடி போலீசார் தங்கள் மீது வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்கள், நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் எங்களையே சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். நாங்கள் தான் புகார் கொடுத்துள்ளோம் என அந்த 8 பேரும் தங்கள் ரத்த மாதிரிகளை வழங்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…

12 minutes ago

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்…ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு  திமுகவை…

42 minutes ago

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை…நாளை இந்த 9 மாவட்டங்களில் வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வென்ற போர்ச்சுகல்!

பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…

2 hours ago

கூட்டணிக்காக பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…

2 hours ago

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

14 hours ago