பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இந்த வேளையில்,அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது.இந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுவர்.ஏனெனில்,அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பொன் செரும் என்பது நம்பிக்கை.
இந்த வேளையில்,அட்சயதிருதியை முன்னிட்டு நேற்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.இதனால் நேற்று அதிகாலை முதலே நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 18 டன்னுக்கும் அதிகமான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததைவிட கூடுதலாக விற்கப்பட்டதாகவும்,இதனால் தங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக சென்னை வைரம் மற்றும் தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.9000 கோடிக்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இது கடந்த 3 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 30% கூடுதல் விற்பனை”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…