சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.
இந்தநிலையில் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க, சென்னை நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் வரை மெரினா கடற்கரை காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு நடத்தினார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் ரவுடிகளுக்கு அனுமதி இல்லையெனவும், கஞ்சா கடத்தலையும், விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சாவை செய்துள்ளதாகவும், கஞ்சா, குட்கா, ரவுடிசத்தை குறைக்க கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…