தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 738 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக தான் உள்ளது என்றும் 27 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 59,918 பேரும், அரசு கண்காணிப்பில் (கொரோனா வார்டு) 211 பேர் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 7,267 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 834 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 32, 796 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் 1480 பேர் டெல்லி சென்று வந்தவர்களில் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 763 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…