BREAKING:குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் – டிஎன்பிஎஸ்சி அதிரடி.!

Published by
murugan
  • குரூப் 4  தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
  • முறைகேடு விவகாரத்தில் 99 தேர்வர்களுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்துள்ளது   டிஎன்பிஎஸ்சி. 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில்  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியல் கடந்த 2019-ஆம்  ஆண்டு நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பலர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக  இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.பின்னர் மற்ற தேர்வர்கள் புகார் அளித்தனர்.அந்த புகாரில் அதிகம் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்தவர்கள் எனவும் புகாரில் கூறினார்கள்.இதைத்தொடர்ந்து  சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ராமேஸ்வரம் கோவிலுக்கு இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும்,   அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறினார்கள். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி  அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.ராமேஸ்வரம் ,கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு செய்ததை உறுதி செய்தது டிஎன்பிஎஸ்சி.மேலும் 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது.சம்மந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக  செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராமேஸ்வரம் , கீழக்கரை தேர்வு மையங்களில் தவிர வேறு எந்த இடங்களிலும் தவறு நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

23 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

44 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

58 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago