Coutrallam [file image]
சென்னை : குற்றாலம் பழைய அருவியில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
தென்காசி பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நெல்லையைச் சேர்ந்த சிறுவன் (17) அஸ்வின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக தென்காசி பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் எல்லாம் அலறி அடித்து ஓடினார்கள். திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளபெருகில் நெல்லையைச் சேர்ந்த சிறுவன் (17) அஸ்வின் என்பவர் அடித்து செல்லப்பட்டார். தனது குடும்பத்தினருடன் குளித்து கொண்டு இருந்த நிலையில், அவர் அடித்து செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வனப்பகுதியினர் குறிப்பிட்ட இடம் ஒன்றை பார்வையிட்ட போது சிறுவனின் உடல் இருந்தது தெரிய வந்தது.
அருவியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…