அன்று ஒரு அண்ணா ! இன்று அண்ணாவின் தம்பி தங்கைகள் 37 பேர் !

Published by
Sulai

நாடாளுமன்றத்தில் நேற்று தமிழக எம்.பி க்கள் அனைவரும் தமிழிலே பதவி ஏற்றது ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது.பதவி ஏற்ற உரையின் முடிவில் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க கருணாநிதி வாழ்க,அம்பேத்கார் வாழ்க, தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக, திராவிடம் ஓங்குக என்று எதிரொலித்த அனைத்து வார்த்தைகளும்  மத்திய  பாஜக அரசுக்கு எதிராகவே அமைந்தது.
இந்த நிகழ்வுகளை பார்க்கும் பொழுது 1962 ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து திராவிட இயக்கம் சார்பில் மாநிலங்களவைக்கு அறிஞர் அண்ணா மட்டுமே தனி ஒரு ஆளாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், இன்றைக்கு அண்ணாவின் தம்பி தங்கைகளாய் 37 பேர் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அன்றைக்கு அண்ணா அவர்கள் எண்ணிக்கை என்பது  பெரியது அல்ல,எண்ணமே பெரியது என்று கூறினார்.மேலும் அவர் பேசிய முதல் உரையான “I BELONG TO THE DRAVIDIAN STOCK” என்ற வார்த்தை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதே போல, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் 303 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜக வை வெறும் 37 பேர் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலாக நேற்றைய உரை இருந்தது. இவர்கள் சாதிக்க நினைக்கும் செயல்கள் பெரும் சவாலாக அமையும். தமிழக மக்களின் உரிமைக்காக இவர்கள் அனைவரும் ஒன்றிணைத்து உறுதியுடன் பாசிசத்திற்கு எதிராக போராட வேண்டியிருக்கும்.

Published by
Sulai
Tags: #Parliment

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

47 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

2 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

5 hours ago