நாளை முதல் +1 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் – மாநில கல்வித்துறை அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

நாளை பிற்பகல் 3 மணி முதல் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடந்தது. இதில், 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. விடைத்தாள் நகல் வழங்குவது மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில கல்வித்துறை தெரிவித்தது.

இந்நிலையில், நாளை பிற்பகல் 3 மணி முதல் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், +1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் http://dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். முன்னதாக 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வு ஒன்று கொரோனாவால் ரத்து செய்யப்பட்டு, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

7 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago