திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் வேலைக்குச் சேர ஆட்கள் கிடைப்பதில்லை என நிறுவனத்தின் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு சில நாட்களில் வேலையை விட்டு சென்று விடுவதாகவும், அதிக சம்பளம் கொடுத்தும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை கம்பெனியின் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு வித்தியாசமான முறையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பின்னர் அந்த அறிவிப்பில் வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங் மற்றும் இரவு ஒரு குவாட்டர் வழங்கப்படும் என்றும், அது போக டீ செலவுக்கு காசும், வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அவர் ஒரு வால்போஸ்டர் போல் ஒட்டி தனது நிறுவனத்தின் முன் வைத்துள்ளார். இந்த விளம்பரம் வெளியான ஒரு சில மணி நேரங்களில் அந்த கம்பெனிக்கு தேவையான அனைத்து வேலை ஆட்களும் கிடைத்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் மற்ற நிறுவனங்களும் இதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பலவிதமாக ஆட்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும், இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆட்கள் வந்துவிட்டதாகவும், நிறுவனத்தின் உரிமையாளர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த சுவரொட்டி விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…