திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டியில் நந்தகுமார் வசித்து வருகிறார்.இவர் அங்கு உள்ள சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.இவரும் இவர் தாயாரும் 6 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் கடையை சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்பு உள்ளே சென்றபோது ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார்.
அப்போது தாயார் அவர் கையை பிடித்துக்கொண்டு மகன் நந்தகுமாரை கூப்பிட்டபோது பயந்த நபர் அவரை தள்ளிவிட்டு ஓடியுள்ளார்.அவனை நந்தகுமார் துரத்தி சென்று பிடித்து கம்பத்தில் கட்டிவைத்துள்ளார்.
இதை அறிந்த மக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கட்டிபோடபட்டிருக்கும் நபரை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
பின்பு நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்த்தவர் என்றும் அவர் குடிபோதையில் வீட்டிற்குள் திருட முயன்றதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…