தமிழ்நாடு

டிக்கெட் மறுவிற்பனை… மாட்டிக்கொண்ட நடத்துனர்.! சிக்கியது எப்படி.?

Published by
மணிகண்டன்

பயணிகள் யாரேனும் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கிறார்களா என்பதை கண்காணித்து டிக்கெட் எடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பேருத்து வழித்தடத்தில் பேருந்தை இடைமறித்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதுண்டு. அந்த பரிசோதனையில்  அரசு பேருந்து நடத்துனரே  மாட்டிக் கொண்ட சம்பவம் நேற்று நடைபெற்றது.

சேலம் மெய்யனூர் போக்குவரத்து கிளையில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் நேரு. இவர் நேற்று சேலம் முதல் சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியை தொடங்கினர். அப்போது உமங்கலம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர் பேருந்தை இடைமறித்து டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையாரும்… கார்த்திகை தீப திருவிழாவும்…

அந்த சமயம் தலைவாசல் பகுதியில் இருந்து ஏறி சிதம்பரம் செல்ல பயணிகள் எடுத்திருந்த டிக்கெட்டை பரிசோதர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கொடுத்திருந்த இரண்டு 100 ரூபாய் டிக்கெட் இரண்டு 10 ரூபாய் டிக்கெட் ஆகியவை ஏற்கனவே நடத்துனர் நேருவால் விற்பனை செய்யப்பட்டது என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டை மீண்டும் விற்பனை செய்த சம்பவத்தை கண்டுபிடித்தவுடன் பரிசோதகர்கள் நடத்துனர் நேருவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவரது சரிவர பதில் அளிக்காத காரணத்தால், உடனடியாக அவர் பணி நிறுத்தம் செய்யப்பட்டு வேறு நடத்துனர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது.

இதனை அடுத்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் அவரை விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்டிருந்தார். கான் பிறகு நடத்துனர் நேருவை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து பொது மேலாளர் பொன்முடி உத்தரவிட்டார். இதனை அடுத்து எவ்வாறு ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் மீண்டும் பயணிகளிடம் விற்பனை செய்யப்பட்டது என்றும், போலீ டிக்கெட் தயார் செய்யப்பட்டதா என்றும் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் நடத்துனர் நேருவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

9 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago