மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதால் இரண்டு குழந்தையுடன் தாய் தற்கொலை.!
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மலேசியாவில் சமையல் வேலை செய்து வருகிறார், இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் மங்கையரசி என்ற மகளும் இருக்கிறார், இந்நிலையில் தனது குழந்தைகளின் படிப்பிற்காக சிவகங்கை மாவட்டத்தில் ஒத்திகைக்கு 3 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை பிடித்தார்.
இந்நிலையில் கடந்த வியாழன் கிழமை அவருடைய வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது இதனால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி உள்ளார்கள் ஆனால் கதவு திறக்கப்படவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வேகமாக கதவை உடைத்தனர், அப்பொழுது வீட்டிற்குள் காளீஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது, மேலும் குழந்தைகள் விஷம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் காளீஸ்வரி தனது தற்கொலைக்கு வீட்டின் உரிமையாளர் கார்திகேயன்தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார், மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரி தகாத வார்த்தைகளில் காளீஸ்வரியை திட்டியதாக தெரிய வந்தது. அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…