ஒரு ரேபிட் டெஸ்ட் கருவி ரூ.600க்கு வாங்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸை விரைவாக பரிசோதனை மேற்கொள்ள இந்தியா, 15 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடமிருந்து ஆர்டர் செய்தது.
அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்திருந்தது. பின்னர் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு , மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்திற்கு இன்று 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை அனுப்பியது.
இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு , 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவிடம் நேரடியாக ஆர்டர் செய்திருந்த நிலையில் நேற்று 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தது. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் உள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு ஆர்டர் செய்த ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலையை தமிழக அரசு கூறியுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த விலையான ரூபாய் 600-க்கு தான் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட் ஒரு முறை தான் பயன்படுத்த முடியும்.ஒரு கிட்டின் விலை ரூபாய் 600 என்று தெரிவித்துள்ளது. இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை.? என்ன விலை.? மற்றும் எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…