இனி தடையின்றி ரேஷன்- புதியநடைமுறை அமல்!

Published by
kavitha

தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்.,1 தேதி முதல் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பல இடங்களில் பயோமெட்ரிக் சரியாக இயங்காததால் மக்கள் சிரமப்பட்டனர்.இதனால் ரேஷன் பொருட்களை பெறுவதில் தேக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறையானது இன்று (புதன்கிழமை) முதல் செயல்படுத்தப்படுகிறது.

இதனால் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொருட்களை பெறலாம். குடும்ப அட்டைதாரர்களின் தற்போதைய சிரமத்தை குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடு என்பதனை கருத்தில் கொண்டு அட்டைதாரர்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பபட்டுள்ளதால் தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டினை காட்டி ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.திட்டப்படி வெளிமாநிலத்தவருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது .

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக நவம்பர் வரை விலையில்லாமல் ரேஷன் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

30 minutes ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

58 minutes ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

1 hour ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

1 hour ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

2 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

2 hours ago