பள்ளிகளில் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Published by
Rebekal

பள்ளிகளில் நடக்கக்கூடிய பாலியல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இதனையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் எனவும், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்பொழுது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இந்த ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இனி ஆன்லைன் வகுப்புகள் பிரச்சினை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாலியல் புகார் விவகாரத்தின் மூலம் நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக தனி குழு அமைத்து பள்ளிகளில் பாலியல் புகார்கள் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழுவில் பெண் ஆசிரியர் ஒருவர் தலைமை வகிப்பார் எனவும், அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி உள்ளதா செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 minutes ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

1 hour ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago