இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவி!

Published by
Sulai

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரியகோடு பகுதியில் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரெமி பிராங்க்ளின்.அந்த பள்ளி மிகவும் அனைவரும் கண்டிப்பாக நடந்து கொள்வார்களாம்.
ஒரு நாள் கணக்கு வகுப்பு நடந்திருக்கிறது.அப்போது ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதி அந்த மாணவியிடம் கணக்கை பூர்த்தி செய் என்று கூறியுள்ளார்.அந்த கணக்கிற்கு சரியான பதிலை பூர்த்தி செய்யாததால் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்னால் அந்த மாணவி ரெமியை அவதூராக பேசியுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த மாணவி அழவில்லை.சிறிது நேரம் நிற்க சொல்லி தண்டனை அளித்துள்ளார்.பிறகு அந்த மாணவியை அவரது இருக்கையில் சென்று அமர சொல்லியிருக்கிறார்.
அப்போது தனது இருக்கையில் அமர்ந்த அந்த மாணவி ரெமி கரும்பலகையை பார்த்தபடி அமர்ந்துள்ளார்.ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருப்பதால் மற்ற மாணவர்களும் ரெமியின் செயலை கவனிக்கவில்லையாம்.
பிறகு பாடம் நடத்தி முடிந்த பிறகு ஆசிரியர் வெளியே செல்ல இருந்த போதும் ரெமி அப்படியே அமர்ந்திருந்துள்ளார்.அதை பார்த்த ஆசிரியர் உடனே பக்கத்தில் சென்று அவரை தட்டியுள்ளார்.அப்போது முன்னே இருந்த மேசையில் அப்படியே சரிந்துள்ளார்.
அப்போது பதறி போன ஆசிரியர் உடனே பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.அவர் உடனே அந்த மாணவியின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு உங்களின் மக்களுக்கு ரொம்ப தலைவலி உடனே வாருங்கள் என கூறியுள்ளனர்.
என்ன எதுவென்று தெரியாமல் அந்த மாணவியின் பெற்றோர் பதறியடித்து வந்துள்ளனர்.அப்போது மயங்கி கிடந்த தங்களின் மகளை பார்த்து உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.
அங்கு அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி இறந்து 1 மணி நேரத்திற்க்கு மேலாகி விட்டது என கூறியுள்ளார்.உடனே அந்த மாணவியின்  பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவியின் இந்த சம்பவம் அந்த பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Sulai

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

3 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

3 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

5 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

5 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

7 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

8 hours ago