கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Published by
மணிகண்டன்

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி, அதே பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பிரவீன், தனது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெளியில் சென்றுள்ளார். வெளியில் சென்ற பிரவீனை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாங்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தாம்பரம் காவல்துறையினர் கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை செய்கையில், கொலை செய்தது ஷர்மிளாவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் என்றும், மாற்று சமூகத்தை சேர்ந்த பிரவீன் தனது தங்கையை திருமணம் செய்த காரணத்தால் நடைபெற்ற கொலை என்பதால் ஆணவக்கொலையாக பிரவீன் மரணம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சர்மிளாவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரவீன் இறந்த தூக்கம் தாளாமல் சர்மிளா வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இதில் கழுத்து நரம்புகள் உடைந்த நிலையில் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோமாவில் இருந்த ஷர்மிளா இன்று உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தன் கணவர் இல்லாத உலகில் நானும் இருக்க மாட்டேன் என்றும், தன் சாவுக்கு தனது குடும்பத்தினர் தாய், தந்தை, சகோதரர்கள் தான் காரணம் என்றும் தந்தை துரை, தாயார் சரளா, அண்ணன்கள் நரேன், தினேஷ் ஆகியோர்தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார் ஷர்மிளா. ஏற்கனவே ஷர்மிளாவின் அண்ணன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பெற்றோர்கள் மீதும் வழக்கு விசாரணை பாய்ந்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

4 minutes ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

24 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

40 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

1 hour ago

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

2 hours ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

2 hours ago