புகைப்படத்தை காட்டி மிரட்டியவரை கண்களை மூட சொல்லி கழுத்தை அறுத்த இளம் பெண்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னையை  சேர்ந்த 50 வயதுடைய சேகர் மகளின் தோழியான 22 வயது பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம்.
  • சேகர் தன்னுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, குடும்பத்தினரை சேகர் மிரட்டி வந்ததால் கழுத்தை அறுத்து கொலை.

சென்னை துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்க வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சடலமாக கிடந்தவர், திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த 50 வயதுடைய சேகர் எனவும், இவர் கற்பூர வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் , தவறான உறவு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், பின்னர் விசாரணையின் போது மகளின் தோழியான 22 வயது பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் காதல் ஏற்பட்டு, இருவீட்டாரும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.

இந்நிலையில், சேகர் தன்னுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, குடும்பத்தினரை சேகர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பிறகு சேகரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அந்த பெண்ணுடன் அடையாறு சென்றுள்ளார். அப்போது வழக்கமாக அவர்கள் சந்திக்கும் விளையாட்டு மைதானம் அருகே வந்து சேகரை, அந்த பெண் கண்களை மூடச் சொல்லியுள்ளார்.

அப்போது, பெவி குயிக்கை எடுத்து சேகரின் கண்ணில் கொட்டிய இளம்பெண், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணை பிடித்துள்ள போலீசார், இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

21 minutes ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

57 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

1 hour ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

3 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago