முக்கிய துறைகளில் முதலிடத்தில் தமிழ்நாடு.! வெளியான ஐஐஎம் சர்வே ரிப்போர்ட்….

Published by
மணிகண்டன்

PEN India நிறுவனம் வெளியிட்ட ஐஐஎம் நடத்திய சர்வே முடிவுகளின் படி, சமூக வளர்ச்சி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மக்கள் தொகை, வரி வருவாய், தொழிற்சாலைகள், சமூக வளர்ச்சி குறியீடு, நகரமயம், மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட காரணிகளை முன்னிறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு ஐஐஎம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை PEN India நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை :

மக்கள் தொகை அளவில் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ளது. மகாராஷ்டிராவில் 13.28 கோடி மக்கள் தொகையும், குஜராத்தில் 6 கோடி மக்கள் தொகையும் கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி வருவாய் :

மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு முக்கிய வருவாயாக இருப்பது மாநிலத்தில் தொழிற்சாலை, தொழில்முனைவோர் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருவாய் ஆகும். இந்த வரி வருவாயில், இந்தியாவின் மான்செஸ்டர் மும்பையை கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம் ரூ.4,51,800 கோடி வரி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. 2வதாக தமிழ்நாடு ரூ.3,14,800 கோடி வரி வருவாய் ஈட்டுகிறது என்றும், அடுத்து குஜராத் ரூ.1,79,600 கோடி வரி வருவாய் ஈட்டுவதாகவும் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வளர்ச்சி குறியீடு :

சமூக வளர்ச்சி குறியீடு என்பது ஒரு மாநிலம் தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வுக்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அளவீடு ஆகும். அதன் அடிப்படையில் 65.34 சதவீதம் கொண்டு முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 57.88 சதவீதம் கொண்டு இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அதேபோல் 3வது இடத்தில் குஜராத் 56.65 சதவீதத்தை கொண்டுள்ளது.

தொழிற்சாலைகள் :

தொழிற்சாலை எண்ணிக்கையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 36,000 தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 28000 தொழிற்சாலைகள் உள்ளன. 3வது இடத்தில் 22000 தொழிற்சாலைகளுடன் குஜராத் மாநிலம் உள்ளது.

நகரமயம் :

மக்கள் தொகைக்கு ஏற்ப, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை கொண்டு நகரமயமாகும் அளவீடு, தமிழ்நாடு 46.5% கொண்டு முதல் இடத்தையும், மகாராஷ்டிரா 45.2% கொண்டு இரண்டாவது இடத்திலும், குஜராத் 42.5% கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மனித வளர்ச்சி குறியீடு :

இது மனித ஒழுக்கம், கற்றல், அறிவு சார்ந்து அறவிடப்படும் குறியீடு ஆகும். இந்த அளவீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் மகாராஷ்டிரா, 3வது இடத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

51 minutes ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

2 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

3 hours ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

4 hours ago