தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி.!

Published by
Ragi

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் முதலமைச்சர் பழனிசாமி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களை நியமித்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இன்னும் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் கொரோனா பாதிப்பை குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருவதாகவும், கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் அதிகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு ரூ. 672 கோடியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு வழங்கி உள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

Recent Posts

எல்லாம் ரெடி..! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுக்லா.!

எல்லாம் ரெடி..! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுக்லா.!

வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…

1 hour ago

டக்கெட் முன்பு ஆவேசமாக கத்திய முகமது சிராஜ்.! அபராதம் விதித்த ஐசிசி.!

லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…

1 hour ago

மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!

சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…

2 hours ago

சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…

3 hours ago

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி – நடிகர் கமல் உருக்கம்.!

சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…

3 hours ago

சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது…மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

4 hours ago