நடிகர் சூர்யா அவர்கள் தமிழக முதல்வர் முன்னிலையில் பழங்குடியின இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது தயாரிப்பு நிறுவனம் (2D) சார்பில் ரூ.1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை வெளிக்காட்டும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு படக்குழு திரையிட்டு காட்டியுள்ளனர். முதல்வர் அவர்களும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் தமிழக முதல்வர் முன்னிலையில் பழங்குடியின இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது தயாரிப்பு நிறுவனம் (2D) சார்பில் ரூ.1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…