தமிழகத்தில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி ஜனநாயகக் கடமை ஆற்றினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதாக தொடங்கியது. மேலும், காலை முதலே பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில் சினிமா பிரபலங்களான நடிகர் அஜித், கமல், ரஜினி, சிவகுமார், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பலர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில்வாக்களித்து தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதி, மதத்திற்கு எப்போதும் அப்பாற்பட்டவன் நான். அவற்றிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என கூறிய அவர், தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது தொடர்பாக நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…