கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி..!

Published by
Sharmi

தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கை தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாலோசித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது போன்று நடக்கக்கூடாது என கூறினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கையை தொடங்க வேண்டும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் மாநில பாடத்திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ யில் பயின்ற +2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கம் போல் இருக்கும் சேர்க்கை முறையே இப்போதும் தொடரும்.

பெருந்தொற்று காலம் காரணமாக கல்லூரி மாணவர்களின் சேர்க்கை தாமதமாக தொடங்கப்படுவதாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து கல்லூரிகளில் பயிலும் முதல் தலைமுறை மாணவர்களுக்கான சலுகைகள் தொடரும் எனவும், கல்லூரிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ளதாகவும், விரைவில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

16 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago