ADMK Secretary Edappadi Palanisamy - Union Minister Amit shah - TN Minister Udhayanidhi stalin [File Image]
மதுரையில் திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், அதிமுக கட்சி பற்றியும் , அதிமுக பாஜக கூட்டணி பற்றியும், சனாதனம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.
அமைச்சர் உதயநிதி பேசுகையில், பேரறிஞர் அண்ணா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது குறித்து செல்லூர் ராஜு பேசியிருந்தார். அதில், ” திமுக இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.” என கூறியிருந்தார். ஆனால் அது தவறு. முதல் நாளே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துவிட்டார். மேலும், சில பேருக்கு தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும். சிலபேரை அப்படியே உதாசீனப்படுத்தி செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிக்கத்தான் திமுக தோற்றுவிக்கப்பட்டது. சனாதனம் இருக்கும் வரை போராடி தான் ஆக வேண்டும். சனாதனம் எனும் சேற்றில் இருந்து இன்னும் நாம் வெளியே வராதது வருத்தம் அளிக்கிறது. இன்னும் சிலர் அந்த சேற்றை சந்தனம் என பூசி கொள்கிறார்கள். இதனை நினைத்து வெட்கமும் வேதனையும் படுகிறேன்.” என்று அண்ணா எழுதியதை செல்லூர் ராஜு பொதுவெளியில் சொல்ல தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சனாதனம் என்றால் என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள். சுமார் 850 கோடி செலவில் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் மத்திய அரசால் கட்டப்படுகிறது. அந்த கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து தனி விமானம் மூலம் சாமியார்கள் எல்லாம் செல்கிறார்கள். செங்கோல் எல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அந்த விழாவுக்கு மத்திய அரசு அழைக்கவில்லை.
மேலும், நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் முதல் அவை கூடுகிறது. அதற்கு ஹிந்தி நடிகை எல்லாம் வருகிறார்கள். ஆனால், அங்கும் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு இல்லை. ஏனென்றால் திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். கணவனை இழந்தவர். அதனால், அவரை கூப்பிடாமல் மறுத்து விட்டார்கள் என்று கடுமையான விமர்சனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார்.
அடுத்து, ஜெயலலிதா எப்போதும் உயிரிழந்தாரோ அப்போதே அதிமுக பாஜகவின் அடிமைகளாக மாறிவிட்டது. தற்போது இருப்பது ‘அண்ணா திமுக’ அல்ல அது ‘அமித்ஷா திமுக’ என்றும் விமர்சனம் செய்தார் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…