ADMK Chief Seacretary Edappadi palanisamy [File Image]
அதிமுக சார்பில் நாளை மதுரையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கவுள்ளார். பல முக்கிய அதிமுக தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாநாட்டிற்கு வருவதற்கான பயண ஏற்பாடுகளை அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை, நடைபெறும் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று மதுரை வந்தடைந்துள்ளது.
சுமார் 1300 அதிமுக தொண்டர்கள் பயணித்த இந்த ரயிலானது முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 13 பெட்டிகள் கொண்டு இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட சென்னை அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இருந்து புறப்படும் அதிமுக தொண்டர்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
சிறப்பு ரயில் மட்டுமின்றி, வழக்கமான ரயில்கள், பேருந்துகள், வேன், கார் என பல்வேறு வகைகளில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…