பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கு… கொரோனா பீதியால் 6 மாத தலைமறைவுக்கு பின் அதிமுக பிரமுகர் இன்று சரண்…

Published by
Kaliraj

திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வணக்கம் சோமு. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்  பொருளாளராக இருந்த இவர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையிலும் ஒருதலைக்காதலின் விளைவாக  திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையை  கடந்த 2019  செப்டம்பர் மாதம் 30 தேதி இவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் காரில் கடத்தினார். இந்த  கடத்தல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்மிகு காவல்துறையினர் அந்த ஆம்புலன்ஸ் காரை தேடிச் சென்றனர். இதை அறிந்த அந்த கும்பல்  திருச்சி – திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே அந்த உதவி பேராசிரியையை சாலையோரம் இறக்கி விட்டு விட்டு அந்த  கடத்தல் கும்பல் தப்பித்தது. இந்த கடத்தல் வழக்கை விசாரித்த காவல்துறையினர்   வணக்கம் சோமுவின் கூட்டாளிகள் தஞ்சையை சேர்ந்த ஜெயபால், அலெக்ஸ், ஞானபிரகாஷம், விக்னேஸ்வரன், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு மட்டும் காவலர்கள் பிடியில் சிக்காமல்  தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு   தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை. மேலும் அவரை, அதிமுகவின்  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது. அவரது ஜாமீன்  மனுகளும் நீதிமன்றத்தால்  தள்ளுபடியான நிலையில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளார்.  இவரை காவல்துறையினர்  திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்த காரணத்தால்  இவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Published by
Kaliraj

Recent Posts

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

15 minutes ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

30 minutes ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

19 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

20 hours ago