[Representative Image]
திருநெல்வேலி பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டை பகுதி மயிலாபுரத்தை சேர்ந்தவர் 52 வயதான பிச்சை ராஜு. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் பேட்டை பஞ்சாயத்து துணை தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ள இவர் பேட்டை எம்ஜிஆர் நகரில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு மதுபான பார் நேரம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் வீரபாகு நகர் அருகே சென்று கொண்டிருக்கையில், பிச்சை ராஜூவை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கூறிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போரடிய பிச்சை ராஜூவை பார்த்தும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு போன் செய்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பிச்சை ராஜு உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், பேட்டை பகுதி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சம்பவ இடத்திற்கு நெல்லை காவல்துறை துணை ஆணையர் அனிதா நேரில் பார்வையிட்டார். தற்போது இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மகும்பலை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…