சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வந்தனர்.தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணையக் குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதியை அதிமுக வரவேற்பதாகவும் ,வாக்குச்சாவடிகளில் நிழலுக்கு பந்தல், குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் இடத்தில் மின்விளக்கு பொறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…