முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4வது நாளாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் என இரு நேரங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், தேனி, அரியலூர், தர்மபுரி, ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு தமிழக முதல்வருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…