யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 8 நாட்களில் 7,967 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பேசிய முதல்வர் பழனிசாமி, 5 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்காணலில் அவை தலைவர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருப்ப மனு அளித்தவர்களை குழுக்களாக பிரித்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் நேர்காணலை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
அமெரிக்கா : கூகிள் தேடலில் ஒரு சிறந்த அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்,…
காஷ்மீர் : உலகின் மிக உயரமான பாலத்தைக் கொண்ட சேனாப்பாலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைக்கும் ரயில் பாதையை…
சென்னை : தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம்…
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி நடைபெற்று…
டெல்லி : இந்தாண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின்…
தர்மபுரி : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவரது தந்தை…